This Article is From Jul 24, 2018

தமிழ்நாடு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணி தேர்வு அறிவிப்பு

சட்ட கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான நேரடி தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

Advertisement
Education Posted by

2017-2018 ஆம் ஆண்டிற்கான சட்ட கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான நேரடி தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு சட்டக்கல்லூரிகளில் 186 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஜூலை 23 ஆம் தேதி தொடங்க இருக்கும் பதிவு, ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி நிறைவடைகிறது. வேலை வாய்பிற்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள், ஆகஸ்டு 6 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்கும் முறை

Advertisement

1. www.trn.tn.nic.in என்ற இணையத்தளத்திற்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும்
2. இரண்டு பணிகளுக்கு, தனித்தனி விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்
3. ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவிடப்படும் பெயர், பணி விவரம், பிறந்த தேதி, முகவரி ஆகியவை இறுதியாக எடுத்து கொள்ளப்படும்
4. நேர்முகத் தேர்வின் போது, ஆன்லைனில் சமர்ப்பித்த சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும்
5. ஒரு பணிக்கு, ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
6. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

Advertisement