Read in English
This Article is From Jun 27, 2020

’இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்கள்’: தந்தை, மகன் மரணத்திற்கு பிரபலங்கள் கடும் கண்டனம்!

தூத்துக்குடியில் போலீஸ் காவலில் இருந்த தந்தை, மகன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் முக்கிய அரசியல் பிரச்னையாகவும், சட்ட சீர்தருத்தம் கோரும் அளவும் உருவெடுத்துள்ளது. 

Advertisement
இந்தியா

’இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்கள்’: தந்தை, மகன் மரணத்திற்கு பிரபலங்கள் கடும் கண்டனம்!

Chennai/New Delhi:

தூத்துக்குடியில் போலீஸ் காவலில் இருந்த தந்தை, மகன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி தங்களது மொபைல் கடையை திறந்த வைத்த குற்றத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸூம் கைது செய்யப்பட்டனர் தொடர்ந்து, 4 நாட்கள் கழித்து மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களது உறவினர்கள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் அவர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரயங்கா சோப்ரா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, இந்த விஷயத்தை கேட்டு நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். சோகமும், கோபமும் வருகிறது. எந்த குற்றம்செய்திருந்தாலும், மனிதர்கள் இத்தகைய மிருகத்தனத்திற்கு தகுதியானவர்கள் அல்ல. 

குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்க அனுமதிக்கக்கூடாது. நமக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். அந்த குடும்பம் என்ன செய்யும் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய ஆதரவும், பிரார்த்தனைகளையும் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். #JusticeForJayarajandBennicks என்று நாம் ஒரு சேர குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் அவர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இருவரது உடலிலும், ஆசனவாயில் காயங்கள் இருந்ததாகவும், மார்பில் இருந்து முடியை பிடுங்கி சித்தரவதை செய்துள்ளதாகவும், அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இந்த சம்பவம் தொடர்பாக சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பதிவில், இந்த சம்பவத்தை அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையுடன் ஒப்பிட்டுள்ளார். 

Advertisement

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், அன்பான பாலிவுட் திரை பிரபலங்களே, தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்று கேள்வி பட்டீர்களா? மற்ற நாட்டினருக்கு தான் உங்கள் இன்ஸாட பக்கங்கள் குரல் கொடுக்குமா? இந்தியாவின் ஜார்ஜ் பிளாய்டுகள் மீக தொலைவில் உள்ளனர். காவல்துறையின் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தை அறிந்து மனதுடைந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் வீரர் சிகர் தவானும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் மீது சுமத்தப்பட்ட கொடூரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இதற்காக நாம் கண்டிப்பாக குரல் எழுப்ப வேண்டும், அவர்களது குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்திற்கு காரணமான துணை காவல் ஆய்வாளர் உட்பட நான்கு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஒருவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, முதல்வர் எடப்பாடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். எனினும், காவல்துறை துன்புறுத்தல் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக அறிவித்துள்ளார். எனினும், இந்த வழக்கை மதுரைக்கிளை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது. 

தூத்துக்குடியில் போலீஸ் காவலில் இருந்த தந்தை, மகன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் முக்கிய அரசியல் பிரச்னையாகவும், சட்ட சீர்தருத்தம் கோரும் அளவும் உருவெடுத்துள்ளது. 

Advertisement

இதுதொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள ஆளும் அதிமுக அரசு அனுமதி அளித்துள்ளதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து, உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதகாவும் அறிவித்துள்ளார். 

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்து கொள்வது கொடூரமான குற்றம். நம்மை பாதுகாப்பவர்களே ஒடுக்குமுறையில் ஈடுபடுவது பெரும் துயரம். பாதிக்கப்பட்டகுடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement