Read in English
This Article is From Aug 04, 2018

கணவனை 'ஏ'டாகூடமாக கடித்த மனைவி - தமிழகத்தில் நடந்த வினோத சம்பவம்

பெண் தனது கள்ளக் காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதை பார்த்த கணவருக்கும் மனைவிக்கும் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. அப்போது கணவரின் பிறப்புறுப்பை கடித்துவிட்டு தன் காதலனுடன் தப்பித்துச் சென்றுள்ளார்.

Advertisement
தெற்கு
New Delhi:

இப்படி எல்லாமா நடக்கும் என்பது போல, தமிழகத்தில் நாளுக்கு நாள் வினோதமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வேலூர் அருகே பெண் ஒருவர் தனது கணவரின் பிறப்புறுப்பை கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு, கள்ளக் காதலனுடன் தப்பித்துச் சென்ற சம்பவம் அப்படிப்பட்ட வினோத சம்பவத்தில் ஒன்று.

45 வயதான அந்த பெண், தனது கணவருடன், நாடகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, உடனே வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்ற அந்த பெண்ணை நீண்ட நேரமாக காணவில்லை. மனைவியை தேடிச் சென்ற கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண் தனது கள்ளக் காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதை பார்த்த கணவருக்கும் மனைவிக்கும் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. அப்போது கோபத்தில், கணவரின் பிறப்புறுப்பை கடித்துவிட்டு தன் காதலனுடன் தப்பித்துச் சென்றுள்ளார்.

ரத்த காயம் ஏற்பட்டு தவித்த கணவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். தனது குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.
 

Advertisement
Advertisement