This Article is From Apr 14, 2019

தமிழ் புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!!

Tamil New Year: உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement
இந்தியா Written by

Tamil New Year 2019: புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருவரும் தமிழில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில்,

"தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்து பதிவில்,

Advertisement

"தமிழ் சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும். அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்" என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement