This Article is From Jan 27, 2019

''தமிழகத்தில் காவி ரத்தம் பாய்ச்சப்பட்டு கொண்டிருக்கிறது''- கொந்தளித்த தமிழிசை

உச்சி சூரியனே எங்களை ஒன்று செய்ய முடியாதபோது உதய சூரியனால் என்ன செய்ய முடியும் என்று மதுரை பொதுக் கூட்டத்தில் தமிழிசை பேசினார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

Tamilisai Soundararajan: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Highlights

  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்ட வந்துள்ளார் மோடி
  • மோடியை வரவேற்று தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்
  • இந்தியாவின் இரும்புத் தலைவன் மோடி என்று தமிழிசை பேசினார்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை வரவேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் வரவேற்புரையாற்றினார். 

விழாவில் அவர் பேசியதாவது-

நாட்டின் இரும்புத் தலைவன் பிரதமர் மோடி. எங்கு பார்த்தாலும் தமிழகம் காவி மயமாகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் 2019-ல் பிரதமராக மோடி பதவியேற்பார். 

லட்சக்கணக்கான தாமரைகள் மலர மலர சூரியனை எங்கே காணோம்?. உங்களை பார்த்து சூரியன் பயந்து மறைந்து விட்டது. உச்சி சூரியனே எங்களை ஒன்றும் செய்ய முடியாதபோது உதய சூரியன் எங்களை என்ன செய்துவிட முடியும்?

தமிழகத்தில் இங்கே காவித்துண்டு, காவித் தொப்பி, காவி ரத்தம் இங்கு பாய்ச்சப்பட்டு கொண்டிருக்கிறது. வெளிப்படையாக ஆட்சி செய்யும் மோடியை வெளிநாட்டுக்கு செல்கிறார் என்று விமர்சிக்கிறார்கள்.

Advertisement

இவ்வாறு தமிழிசை பேசினார். 
 

Advertisement