விழுப்புரத்தில் தனியார் பஸ் - வேன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த விழுத்து ஏற்பட்டது. தனியார் பஸ் ஒன்று சேலத்திலிருந்து சென்னையை நோக்கி சென்று கெண்டிருந்தது. இதேபோன்று மறு முனையில் சென்னையில் இருந்து காங்கேயம் நோக்கி மினி வேன் வந்து கொண்டிருந்தது.
இந்த இரண்டும் கள்ளக்குறிச்சி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்தவர்கள் கோவை, சேலம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
Advertisement
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
COMMENTS
Advertisement