This Article is From Jan 13, 2019

''குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதை முதல்வர் பழனிசாமி நிரூபிக்க வேண்டும்''- தமிழிசை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டிருக்கும் கொடநாடு எஸ்டேட் உயிரிழப்புகள் தொடர்பான ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

''குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதை முதல்வர் பழனிசாமி நிரூபிக்க வேண்டும்''- தமிழிசை

கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி உள்பட 5 பேர் உயிரிழந்த விவகாரத்தின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஆவணப்படம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார்கள் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது-

தன் மீதான புகார் குறித்து முதல்வர் சில விளக்கங்களை கூறியுள்ளார். அரசியல் சூழ்ச்சியின் காரணமாக இந்த நிகழ்வுகள் நடப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்திற்கு செல்கிறது. தன்மீதான குற்றச்சாட்டு தவறு என்றால் அதனை நிரூபிக்கும் கடமை முதல்வருக்கு உள்ளது.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

.