This Article is From Jul 13, 2020

ஒரே நாளில் சென்னையில் 1140, மதுரையில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு- தமிழக நிலவரம் என்ன?

தமிழகத்தில் சென்னையை அடுத்து இன்றைய தினம் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 464 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Advertisement
தமிழ்நாடு Written by

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 92,567 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

Highlights

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையை அடுத்து மதுரையில் பாதிப்பு அதிகமாகி வருகிறது
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது

தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,140 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,42,798 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,035 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 92,567 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 48,196 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,032 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

தமிழகத்தில் சென்னையை அடுத்து இன்றைய தினம் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 464 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 

Advertisement

கொரோனா தொற்று இருக்கிறதா என்று அறிய இன்று மட்டும் 44,560 சோதனைகள் செய்யப்பட்டன. தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைந்தபட்சமாக 12 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளன. அதைத் தொடர்ந்து அரியலூர் மட்டும் கரூர் மாவட்டங்களில் முறையே 53 மற்றும் 56 பேருக்கு கொரோனாவிலிருந்து மீள சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


 

Advertisement
Advertisement