நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.
ஹைலைட்ஸ்
- இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா
- மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகத்ததில்தான் அதிக கொரோனா பாதிப்பு
- தமிழகத்தில் டிஸ்சார்ஜ் விகிதமும் அதிகமாக உள்ளது
தமிழகத்தில் நேற்று 817 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 558 பேர். ஒட்டுமொத்த அளவில் 18,545 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 567 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 9,909 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தற்போது 8,500 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 133 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (27-05-2020):
அரியலூர் - 362
செங்கல்பட்டு - 888
சென்னை - 12,203
கோவை - 146
கடலூர் - 439
தர்மபுரி - 8
திண்டுக்கல் - 134
ஈரோடு - 71
கள்ளக்குறிச்சி - 227
காஞ்சிபுரம் - 330
கன்னியாகுமரி - 59
கரூர் - 80
கிருஷ்ணகிரி - 25
மதுரை - 241
நாகை - 52
நாமக்கல் - 77
நீலகிரி - 14
பெரம்பலூர் - 139
புதுக்கோட்டை - 21
ராமநாதபுரம் - 65
ராணிப்பேட்டை - 96
சேலம் - 68
சிவகங்கை - 31
தென்காசி - 85
தஞ்சை - 85
தேனி - 108
நெல்லை - 301
திருப்பத்தூர் - 32
திருப்பூர் - 114
திருவள்ளூர் - 825
திருவண்ணாமலை - 263
திருவாரூர் - 42
திருச்சி - 79
தூத்துக்குடி - 194
வேலூர் - 40
விழுப்புரம் - 332
விருதுநகர் - 116
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 86
ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 67
மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (27-05-2020):
அரியலூர் - 355
செங்கல்பட்டு - 395
சென்னை - 5,800
கோவை - 144
கடலூர் - 416
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 112
ஈரோடு - 69
கள்ளக்குறிச்சி - 93
காஞ்சிபுரம் - 200
கன்னியாகுமரி - 27
கரூர் - 67
கிருஷ்ணகிரி - 20
மதுரை - 140
நாகை - 51
நாமக்கல் - 77
நீலகிரி - 13
பெரம்பலூர் - 135
புதுக்கோட்டை - 7
ராமநாதபுரம் - 30
ராணிப்பேட்டை - 76
சேலம் - 35
சிவகங்கை - 26
தென்காசி - 54
தஞ்சை - 69
தேனி - 75
நெல்லை - 146
திருப்பத்தூர் - 28
திருப்பூர் - 114
திருவள்ளூர் - 470
திருவண்ணாமலை - 91
திருவாரூர் - 33
திருச்சி - 68
தூத்துக்குடி - 78
வேலூர் - 33
விழுப்புரம் - 305
விருதுநகர் - 47
விமான நிலையம் - 4
ரயில் நிலையம் - 1
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18,545 பேரில் 9,909 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.