தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 307 ஆக அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 18,325 பேர் குணம் அடைந்திருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்காக புதிதாக 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இவற்றை தவிர்த்து 88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருப்பவர்கள் 044 – 40067108 என்ற எண்ணை தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை கால தாமதமின்றி பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.