கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் மட்டும் 19 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1,146 பேர் என்பது இன்னொரு அதிர்ச்சியளிக்கும் தகவல்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 ஆயிரத்து 22 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. பரிசோதனைகளைப் பொருத்தளவில் தமிழகத்தில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 874 பேர் ஆண்கள். 584 பேர் பெண்கள் ஆவர்.
கொரோனா பாதிப்புகளை கண்டறிவதற்காக தமிழகத்தில் 44 அரசு மற்றும் 30 தனியார் என மொத்தம் 74 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 395 ஆக அதிகரித்திருக்கிறது.
ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாள் என்ற அடிப்படையில் இந்த எண்ணிக்கை மிக அதிமாகும். மொத்தம் 251 பேர் கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.
சிகிச்சை குணம் அடைந்தவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தமிழகத்தில் 13 ஆயிரத்து 503 பேர் தற்போது கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10,223 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 95 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.