This Article is From Jun 06, 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது

சிகிச்சை குணம் அடைந்தவர்கள்,  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தமிழகத்தில் 13 ஆயிரத்து 503 பேர் தற்போது கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை  பெற்று வருகின்றனர். இவர்களில் 10,223 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 

Advertisement
தமிழ்நாடு Posted by

கடந்த 24 மணி நேரத்தில் 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Highlights

  • தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியள்ளது
  • சென்னையில் கொரோனாவில் தாக்கம் சற்றும் குறையவில்லை
  • ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், அச்சமும் அளிக்கிறது

கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே  நாளில் மட்டும் 19 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1,146 பேர் என்பது இன்னொரு அதிர்ச்சியளிக்கும் தகவல்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 ஆயிரத்து 22 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. பரிசோதனைகளைப் பொருத்தளவில் தமிழகத்தில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 874 பேர் ஆண்கள். 584 பேர் பெண்கள் ஆவர். 

Advertisement

கொரோனா பாதிப்புகளை கண்டறிவதற்காக  தமிழகத்தில் 44 அரசு மற்றும் 30 தனியார் என மொத்தம் 74 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில் 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 395 ஆக அதிகரித்திருக்கிறது. 

Advertisement

ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஒரே நாள் என்ற அடிப்படையில் இந்த எண்ணிக்கை மிக அதிமாகும். மொத்தம் 251 பேர் கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். 

சிகிச்சை குணம் அடைந்தவர்கள்,  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தமிழகத்தில் 13 ஆயிரத்து 503 பேர் தற்போது கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை  பெற்று வருகின்றனர். இவர்களில் 10,223 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 

Advertisement

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 95 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16  பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement