This Article is From Jun 21, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா! 53 பேர் உயிரிழப்பு!!

இன்று 1,438 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 32,754 பேர் குணமடைந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா! 53 பேர் உயிரிழப்பு!!

ஹைலைட்ஸ்

  • தமிகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது
  • இன்று தமிழகம் முழுவதும் 2,532 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர்
  • இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 வது நாளாக ஆயிரத்திற்கும் அதிகமாக  கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவாக தமிழகம் முழுவதும் 2,532 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 59,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,493 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 41,172 ஆக அதிகரித்துள்ளது. அதே போல முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 757 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,438 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 32,754 பேர் குணமடைந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 8,92,612 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் 31,401 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

.