This Article is From Jul 08, 2020

தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 1,261 பேருக்கு பாதிப்பு

கொரோனா  பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 379, திருவள்ளூரில் 300, செங்கல்பட்டில் 273, வேலூரில் 160, தூத்துக்குடியில் 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 1,261 பேருக்கு பாதிப்பு

குணம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 46, 480  பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 35,979 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. 

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,292 பேர் ஆண்கள், 1,464 பேர் பெண்கள் ஆவர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 பேர் தமிழகத்தில் உயிரிழந்தனர். அவர்களில் 21 பேர் தனியார் மற்றும் 43 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 

தமிழகத்தில் 52 அரசு மற்றும் 46 தனியார் என மொத்தம் 98 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 3,051 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

குணம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 46, 480  பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா  பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 379, திருவள்ளூரில் 300, செங்கல்பட்டில் 273, வேலூரில் 160, தூத்துக்குடியில் 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

.