This Article is From Jul 06, 2020

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு தமிழகத்தில் ஒரே நாளில் 3,793 பேர் டிஸ்சார்ஜ்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,747 பேருக்கும் செங்கல்பட்டில் 213, மதுரை 245, தேனி 119, திருவள்ளூர் 175, தூத்துக்குடி 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement
தமிழ்நாடு Posted by

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.

Highlights

  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,793 பேர் பாதிப்பிலிருந்து மீண்டனர்
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று
  • தமிழகத்தில் தற்போது 46,833 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரையில்லாத அளவுக்கு ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,793 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,285 பேர் ஆண்கள், 1,542 பேர் பெண்கள் ஆவார்கள். 

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 33,518 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத் பாதிப்பில் 70,370 பேர் ஆண்கள், 44,586 பேர் பெண்கள், 22 பேர் திருநங்கைகள் ஆவர்.

Advertisement

தமிழகத்தில் 49 அரசு, 46 தனியார் என மொத்தம் 95 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் தனியார் மற்றும் 46பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.

நோய் பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 46,833 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,747 பேருக்கும் செங்கல்பட்டில் 213, மதுரை 245, தேனி 119, திருவள்ளூர் 175, தூத்துக்குடி 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement