This Article is From Jun 27, 2020

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு! 68 பேர் உயிரிழந்தனர்

கடந்த 24 மணி நேரத்தில் 2,737 பேர் சிகிச்சை குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 44 ஆயிரத்து  94 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள்.

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு! 68 பேர் உயிரிழந்தனர்

இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3,713 பேரில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று 3713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
  • கடந்த 24 மணி நேரத்தில் 2,737 பேர் குணம்பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்
  • ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 68 பேர் பலியானது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து, 335 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில்லாத அளவுக்கு ஒரே நாளில் 68  பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.  அவர்களில் 23 பேர் தனியார் மற்றும் 45 பேர் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள். புதிய உயிரிழப்புகளால், தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 34,805 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3,713 பேரில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். 

கடந்த 24 மணி நேரத்தில் 2,737 பேர் சிகிச்சை குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 44 ஆயிரத்து  94 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள்.

உயிரிழந்தவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 33 ஆயிரத்து 213 பேர் கொரோனா பாதிப்புக்கு  சிகிச்சை எடுத்து வருகிறார்கள். 

சென்னையில் மட்டும் இன்று  புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 217 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 98 பேருக்கும், ராமநாதபுரத்தில் 93 பேருக்கும், திருவள்ளூரில் 146 பேருக்கும், திருவண்ணாமலையில் 110  பேருக்கும், வேலூரில் 118 பேருக்கும் கொரோனா தொற்று  இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

.