This Article is From Jul 11, 2020

தமிழகத்தில் புதிதாக 3,965 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 1,185 பாதிப்பு

கடந்த 24 நேரத்தில் மட்டும் 3,591 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 85,915 பேராக உயர்ந்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

சென்னையில் தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா பாதிப்பு 2000 க்கும் குறைவாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் புதிதாக 3,965 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,185 பேருக்கு இன்று தொற்று ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. 

கடந்த 24 நேரத்தில் மட்டும் 3,591 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 85,915 பேராக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய பாதிப்பையும் சேர்த்து மொத்தம் 76 ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

இன்று மட்டும் கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில்  69 பேர் பலியாகி உள்ளனர். இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா பாதிப்பு 2000 க்கும் குறைவாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

சென்னையை தவிர்த்து இன்று மதுரையில் 277, தேனியில் 119, செங்கல்பட்டில் 237, திருவள்ளூரில் 346, தூத்துக்குடியில் 175 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

குணம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 46,410 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement