This Article is From Jun 16, 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 49 பேர் உயிரிழப்பு!!

கடந்த சில நாட்களாக  சென்னையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.  இந்த நிலையில் சென்னையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 919 ஆக குறைந்துள்ளது.  சென்னையில் மொத்தம் 34 ஆயிரத்து 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 49 பேர் உயிரிழப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு
  • மொத்த பாதிப்பு தமிழகத்தில் 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது
  • சென்னையில் ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இன்று தமிழகத்தில் 1,515 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48  ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக  சென்னையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.  இந்த நிலையில் சென்னையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 919 ஆக குறைந்துள்ளது.  சென்னையில் மொத்தம் 34 ஆயிரத்து 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ணி நேரத்தில் 1,438 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்கள். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. 

குணம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து தற்போது 20  ஆயிரத்து 706 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று உயிரிழந்த 49 பேருடன் சேர்த்து கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது. 

.