This Article is From May 12, 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 716 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 8,718 ஆக உயர்வு

சென்னையை பொருத்தவரை, இன்று புதிதாக 510 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் மொத்தம் 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement
தமிழ்நாடு Written by

இன்று 8 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Highlights

  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 8,718 ஆக உயர்ந்துள்ளது
  • இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று புதிதாக 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்திருக்கிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை பொருத்தவரை, இன்று புதிதாக 510 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் மொத்தம் 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. 83 பேர் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2,134 பேருக்கு கொரோனா குணம் அடைந்துள்ளது. 

Advertisement

உயிரிழந்தவர்கள், சிகிச்சை குணம் அடைந்தவர்களை தவிர்த்து தற்போது தமிழகத்தில் 6,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மொத்தம் தமிழகத்தில் 5,848 ஆண்கள், 2,867 பெண்கள் மற்றும் 3 திரு நங்கைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 

Advertisement

இன்று மட்டும் மொத்தம் 11,788 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஆய்வுக்கூடங்கள் 38 அரசு மற்றும் 17 தனியார் என மொத்தம் 55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Advertisement