This Article is From May 25, 2020

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இன்று மட்டும் 407 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8,731 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு!

நோய் பாதித்தவர்களில் 51.11 சதவீதம்பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஹைலைட்ஸ்

  • இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • ஒரே நாளில் 7 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்
  • தினந்தோறும் சென்னையில் 500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 549 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். புதிய பாதிப்புகளின் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இன்று மட்டும் 407 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8,731 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 88 சதவீதம்பேருக்கு அறிகுறியே இல்லை என்ற அதிர்ச்சி தகவலையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இன்று மட்டும் 7 பேர் உயிழந்துள்ளனர். பலியானோரின் மொத்த எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

நோய் பாதித்தவர்களில் 51.11 சதவீதம்பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

.