This Article is From May 16, 2019

பி.எட். தேர்வு தேதி மாற்றம்!! உயர் கல்வித்துறை அறிவிப்பு!

டெட் தேர்வு ஒரே நாளில் நடைபெறுவதாக இருந்ததால் பி.எட். தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

டெட் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

பி.எட். தேர்வுக்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வும் அதே நாளில் வருவதால் தேதியை உயர் கல்வித்துறை மாற்றி அமைத்துள்ளது. 

முன்னதாக பி.எட். தேர்வு ஜூன் மாதம் 8-ம்தேதி நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் டெட் தேர்வுக்கான முதல்தாள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் பி.எட். தேர்வு ஜூன் 13-ம்தேதி பிற்பகம் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பி.எட். இறுதியாண்டு தேர்வும், டெட் தேர்வும் ஜூன் 8-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பி.எட். தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்த நிலையில், அதனை உயர்கல்வித்துறை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 

Advertisement
Advertisement