This Article is From Dec 24, 2018

‘அடுத்த 24 மணி நேரத்தில்…!’- வானிலை மையம் மழை அப்டேட்

நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது

Advertisement
Tamil Nadu Posted by

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை, இன்னும் ஒரு சில நாட்களில் முடியப் போகும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை குறித்து வானிலை மையம் கூறுகையில், ‘குமரிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலியின் பாபநாசத்தில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழையும், புதுச்சேரி, மரக்காணம், சீர்காழி, செய்யாறு, மகாபலிபுரம், திண்டிவனம், வேதாரண்யம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது' என்று தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement