This Article is From Nov 10, 2018

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த டாட்டா ஸ்டீல் மேனஜர்

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து சென்ற முன்னாள் ஊழியர், பரிதாபாத்தில் உள்ள கம்பெனி கிடங்கில் நுழைந்து தான் பணிபுரிந்தற்காக வழங்கப்பட வேண்டிய இறுதி பணத்தொகையை வேண்டியுள்ளார் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement
இந்தியா

அரின்தம் பால் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்தவர்.

Faridabad:

டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி கம்பெனி கிடங்கில் முன்னாள் ஊழியரால் சுட்டுக் கொள்ளப்பட்டார். நிர்வாகி அரின்தம் பால் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டார். 

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து சென்ற முன்னாள் ஊழியர், பரிதாபாத்தில் உள்ள கம்பெனி கிடங்கில் நுழைந்து தான் பணிபுரிந்தற்காக வழங்கப்பட வேண்டிய இறுதி பணத்தொகையை கேட்டுள்ளார் என்று போலீசார் கூறியுள்ளனர். 

முன்னாள் ஊழியர் விஷ்வாஸ் பாண்டே அரின்தம் பால் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். பின் விஷ்வாஸ் பாண்டே பின்பக்கம் வழியாக தப்பித்து சென்றுள்ளார். 

துப்பாக்கியால் சுடப்பட்ட அரின்தம் பாலை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Advertisement
Advertisement