Read in English
This Article is From Aug 22, 2018

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை எனக் குற்றச்சாட்டு- ஆசிரியருக்கு விநோத தண்டனை!

இதுதொடர்பான வீடியோக்கள் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எல்லூரூ பகுதி சாலையில் கடந்து செல்வோர்களால் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது

Advertisement
தெற்கு
Hyderabad:

ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, பொதுமக்களால் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான வீடியோக்கள் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எல்லூரூ பகுதி சாலையில் கடந்து செல்வோர்களால் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை அவரது ஆங்கில ஆசிரியர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல்  வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளார் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது. சமீபத்தில் அந்த மாணவி கர்ப்பமடைந்த போது கருவைக் கலைப்பதற்காக அந்த ஆசிரியர் கர்ப்பத்தடை மாத்திரைகளையும் வழங்கியுள்ளார் எனத் தெரிகிறது. இதையடுத்து அம்மாணவிக்கு ரத்தப்போக்கு அளவுக்கு அதிகமாக ஆக சந்தேகமடைந்த பெற்றோர் விசாரித்ததில் அம்மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும் கர்ப்பமடைந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அப்பள்ளி ஆசிரியரைப் பொதுமக்கள் பிடித்து அவரை நிர்வாணமாக்கி சாலைகளில் அடித்து இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வீடியோவில் ஒருவர், “ஒரு ஆசிரியர் ஆன இவன் பத்தாம் வகுப்பு மாணவிக்கு அதிக மதிப்பெண்கள் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளான். இதன் மூலம் அம்மாணவி கர்ப்பமடைந்து அதன் பின்னர் மாத்திரை சாப்பிட்டதால் மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி உயிருக்குப் போராடி வரும் சூழல் உள்ளது. மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்மையை அறிந்ததும் அவனை ஏதும் செய்யாமல் விட முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

அந்தப் பள்ளி ஆசிரியர் ராம்பாபு தற்போது காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையில், ‘என்னைப் பேச அழைத்துவிட்டு 15 பேர் கருணை இல்லாமல் அடித்துவிட்டனர்’ எனக் கூறியுள்ளார் ராம்பாபு.

Advertisement
Advertisement