ஹரியானாவில் உள்ள குர்கோனில் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயலும் நர்சரி மாணவர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் வாய்களில் டேப்பை ஓட்டிய ஆசிரியை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த அச்சுறுத்தும் சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தேறிய நிலையில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
அந்த வீடியோ காட்சியில் நான்கு வயதேயுள்ள மாணவர்களின் வாய்களில் வேண்டுமென்றே குழந்தைகளின் வாயில் டேப்பை ஒட்டுவதுபோல் காட்சி அமைந்திருக்கும். அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியையை பணிநீக்கம் செய்த்து.
‘பெற்றோர்களின் புகாரையும் மற்ற மாணவர்களின் நலனை கருதியும் அந்த ஆசிரியையை பணிநீக்கம் செய்தோம்' என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
இது குறித்து அந்த ஆசிரியரிடம் கேட்டபோது அக்குழந்தைகள் மோசமான வார்தைகளை பயன்படுத்துவதுடன் மற்ற மாணவர்களையும் தொந்தரவு செய்வதாக கூறினார்.