This Article is From Nov 05, 2018

ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனை ஊழியர்களால் பாலியல் பலாத்காரம்!

மருத்துவமனை ஊழியர் உட்பட மேலும் 4 பேரால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 4 பேரும் தலைமறைவாகியுள்ளனர்

ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனை ஊழியர்களால் பாலியல் பலாத்காரம்!

உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

Bareilly, Uttar Pradesh:

உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் மருத்துவமனை ஒன்றில் பாம்பு கடிக்காக 5 நாட்களுக்கு முன்பாக இளம்பெண் ஒருவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் உட்பட மேலும் 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மற்ற 4 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று போதே அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு தெரிவித்துள்ளார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஏ.சிங் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார்.

முதல் கட்டமாக மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அவருடன் குற்றசம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 4 பேர் மீது முதல் தகவலறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் சிசிடிவி காமரா பதிவுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து அந்தப்பெண் தனது பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்துள்ளார். இளம்பெண் இரவில் தனியாக இருந்த போது யூனிபார்ம் அணிந்த ஒருவரும் மற்ற 4 பேரும் ஐசியூவிற்குள் புகுந்துள்ளனர். ஊசி மருந்து ஒன்றை வலுக்கட்டாயமாக செலுத்த முயன்றுள்ளனர்.

ஆனால் அந்த பெண் அதனை தடுக்க மிகுந்த போராட்டதில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணை கட்டிப்போட்டு இவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பின்னர் அந்த பெண்ணின் பாட்டி மருத்துவர்களிடம் புகார் தெரிவிக்கவே மருத்துவமனை நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர்.

.