Read in English
This Article is From Jul 24, 2018

மதுரை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் காளை மோதி இளைஞர் பலி

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செருவலிங்கம், நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்

Advertisement
தெற்கு
Madurai:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உரிச்சான்பட்டியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை மோதி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று பலியானார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உரிச்சான்பட்டி என்கிற கிராமத்தில், கடந்த ஜூலை 19ம் தேதி கருப்பணசாமி கோவில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

இதில், மாடு பிடிக்கும் போது, செருவலிங்கம் என்கிற வாலிபர் காயமடைந்தார். இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

Advertisement