This Article is From Mar 16, 2019

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

சோபியான் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி குஷ்பூ ஜான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

படுகாயம் அடைந்த சிறப்பு போலீஸ் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சி.

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது வீட்டின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சோபியான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

ஸ்ரீநகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் வெஹில் என்ற கிராமம் உள்ளது. இங்கு இன்று மதியம் 2.40 மணியளவில் சிறப்பு போலீஸ் அதிகாரி குஷ்பூ ஜான் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது அவருக்கு மிக அருகாமையில் இருந்து தீவிரவாதிகள் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த குஷ்பூ ஜான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், '' படுகாயம் அடைந்த சிறப்பு போலீஸ் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிர் பிரிந்தது. தீவிரவாதிகளின் இந்த செயலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த துயரமான நேரத்தில் நாங்கள் குஷ்பூவின் குடும்பத்தாருடன் துணை நிற்கிறோம்'' என்று தெரிவித்தனர். 

தீவிரவாத தாக்குதல் நடந்ததை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளன. 

.