This Article is From Oct 05, 2018

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி, ஒருவர் காயம்!

காயமடைந்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்

ஜம்மூ - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், தீவிரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

கொல்லப்பட்டவர்கள், தேசிய கான்ஃபரென்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

.