This Article is From May 02, 2019

தன் பாதுகாவலரை ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்

கடந்த 2017ம் ஆண்டு துணை பாதுகாவலராகவும் நியமித்தார். 

தன் பாதுகாவலரை ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னருக்கு 3 திருமணம் நடந்து மணமுறிவும் ஆகியுள்ளது. மன்னருக்கு 7 குழந்தைகள் உள்ளனர்

Bangkok:

தாய்லாந்து  நாட்டில் கடந்த 2016 முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன் (66) பொறுப்பேற்றார். இவரை ரமா எக்ஸ் என்று அழைக்கின்றனர். இவர் வரும் சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வ மன்னராக முடிசூடி அரியணை ஏறவுள்ளார். இவருக்கு புத்தம் மற்றும் பிராமண முறைப்படி முடிசூடும் விழாக்கள் கொண்டாடப்படும் எனவும் முடிசூடிய மறுநாள் மாபெரும் அணிவகுப்பு நடத்தப்படும் எனவும் மன்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் வஜிரலங்கோன், கடந்த 2014ம் ஆண்டு சுதிடா டித்ஜாய் என்ற பெண்ணை அவரது தனிப்பட்ட பாதுகாப்புப்படையின் துணை தலைவராக நியமித்தார். அதன் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு துணை பாதுகாவலராகவும் நியமித்தார். 

சுதிடா ஏற்கனவே தாய் ஏர்வேஸில் விமான உதவியாளராக பணி புரிந்தவராவார். சில ராஜ்ய பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் ராஜாவுடன்  தொடபு குறித்து கிசுகிசுவை வெளிப்படுத்தி வந்தன. ஆனால் அதை அரச குடும்பத்தினர் மறுத்து வந்தனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.