This Article is From Mar 05, 2020

மீண்டும் களத்தில் 'தல' தோனி... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் 2020 ஐபிஎல் தொடர்!

இந்நிலையில் ஐபிஎல் ஆட்டத்திற்கான பயிற்சிக்காகத் தல தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தடைந்தனர்.

மீண்டும் களத்தில் 'தல' தோனி... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் 2020 ஐபிஎல் தொடர்!

ஹைலைட்ஸ்

  • 2019 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி வெள
  • தோனி கண்டிப்பாக ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என சென்னை அணியின் சார்பில்
  • களத்தில் தோனியைக் கண்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.. காரணம் 'தல' எம்.எஸ்.தோனி. ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கடந்த 2008 ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில் மும்பை அணி 4 முறையும், சென்னை அணி 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

வருடா வருடம் ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் 'கேப்டன் கூல்' என்றழைக்கப்படும் எம்.எஸ்.தோனி. 2019 உலகக்  கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியது. அந்தப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். இன்றும் ரசிகர்கள் பலரின் கண்களில் கண்ணீரை வர வரவழைக்கும் காட்சி அது.

எம்.எஸ்.தோனி  கடைசியாக விளையாடிய போட்டியும் அதுதான். அதன் பிறகு இந்தியா விளையாடிய எந்தவொரு போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. அதனால் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் அனைவரும் மனதில் ஏற்பட்டது. இது ஒருபுறமிருக்க, அவர் ஐபிஎல் போட்டியிலாவது விளையாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் தோனி கண்டிப்பாக ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் எனச் சென்னை அணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி தல தோனியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ie8d5ba8

இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனியை களத்தில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக்  கொண்டிருந்தனர். இந்நிலையில் ஐபிஎல் ஆட்டத்திற்கான பயிற்சிக்காகத் தல தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தடைந்தனர். தோனியின் ஆட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்தனர். களத்தில் தோனியைக் கண்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டியே சிஎஸ்கே அணி மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்பதால் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   

-சிவக்குமார்

.