This Article is From Nov 02, 2019

TN Rain news - தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை!

சென்னையைப் பொறுத்தவரை, வானம், மேக மூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

Advertisement
தமிழ்நாடு Written by

கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

TN Weather - வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் (Tamilnadu) மழை (Rain) தொடரும் என்று வானிலை மையம் (IMD) தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள தகவல்படி, “தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமாக மழையும், வட தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம், மேக மூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டையில் 2 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement