This Article is From Oct 23, 2019

Heavy Rain Alert- அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

Heavy Rain Alert- "சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது"

Heavy Rain Alert- அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

Heavy Rain Alert- வடகிழக்கு பருவமழை (NEM) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்யக்கூடும் என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள தகவல்படி, ‘மேற்கு மத்திய வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது சற்றே வலுவடைந்து இன்று ஆந்திர பிரதேச கடற்கரைக்கு அப்பால் மேற்கு மத்திய வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில  மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும்,

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.