This Article is From Nov 30, 2018

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

விவசாயிகளின் வலியை பிரதமர் உணர்ந்து நீண்டகால தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
தெற்கு Posted by

விவசாய கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை அளிக்க வேண்டும், விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தரபிரதேசம்

உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 200க்கும் அதிகமான விவசாயக் குழுக்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா, சரத் யாதவ் உட்பட 21 அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து ஒரே மேடையில் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்,

Advertisement

விவசாயிகளின் வலியை பிரதமர் உணர்ந்து நீண்டகால தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடைபெறுகிறது. தமிழக விவசாயிகளும் இதே பிரச்சனைகளைத்தான் சந்திக்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement