This Article is From Sep 27, 2019

keeladi: ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது: மு.க.ஸ்டாலின்

கீழடி தொல்லியல் ஆய்வுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Advertisement
தமிழ்நாடு Edited by

ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது. 

இவை தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. எனவே கீழடி அகழாய்வு இடத்தை பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடிக்கு சென்று அங்கு அகழாய்வு நடைபெற்ற இடத்தையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் ஆய்வு செய்தார்.

Advertisement

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ஆய்வு பணியில் ஈடுபடும் தொல்லியல் துறைக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவித்த அவர், ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது என்றார். 

மத்திய அரசும், மாநில அரசும் முழு கவனத்துடன் ஆகழாய்வை மேற்கொள்ள வேண்டும், கி.மு.6.ம் நூற்றாண்டில் தமிழர் நாகரீகம் எப்படி இருந்தது என்பது கீழடி ஆய்வில் தெரிய வருகிறது என்று தெரிவித்தார். 

Advertisement

மேலும், கீழடி தொல்லியல் ஆய்வுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கீழடியை போன்று தூத்துக்குடி அருகேயுள்ள ஆதிச்சநல்லூரிர் தொல்லியல் ஆய்வும் தொடர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

முன்னாதாக, 5ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் போன்றவை கண்டறியப்பட்டன.

இதே போல மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இதுவரை 13,638 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement