Hyderabad:
ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் பொங்குரு நாராயணா. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில், அங்கமாக இருக்கும் நாராயணா, ‘நாராயணா குழுமத்தை’ நடத்தி வருபவர் ஆவார். இந்த குழுமத்துக்குக் கீழ் 200 பள்ளிகள், 400 ஜூனியர் கல்லூரிகள் மற்றும் 25 கல்லூரிகள் இயங்கி வருவதாக தெரிகிறது.
ரெய்டு குறித்து அமைச்சர் நாராயணா, மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் நிறுவன ஊழியர்கள் சிலர், ஐடி ரெய்டு நடந்து வருவது உண்மை தான் என்று கூறியுள்ளனர்.
COMMENTS
Advertisement