Read in English
This Article is From Mar 15, 2019

தினகரனுக்கு ‘ப்ரஷர் குக்கர்’ சின்னம் கிடைக்குமா, கிடைக்காதா?

விசாரணைக்கு வந்த வழக்கை,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

Advertisement
இந்தியா Edited by

முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதிமுக-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலையை தனக்கு ஒதுக்கித் தருமாறு தினகரன் முறையிட்டிருந்தார்.

New Delhi:

இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்க உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில், தனக்கு ‘ப்ரஷர் குக்கர்' சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

இன்று விசாரணைக்கு வந்த வழக்கை,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அப்போது தினகரனின் கோரிக்கைக்கு, தேர்தல் ஆணையம் வரும் 25 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லி வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்ற அமர்வு.

முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதிமுக-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலையை தனக்கு ஒதுக்கித் தருமாறு தினகரன் முறையிட்டிருந்தார். அதே நேரத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இறுதியாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு, இரட்டை இலை சின்னம் சொந்தம் என்று பிப்ரவரி 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

Advertisement

அதிமுக இரு அணிகளாக பிரிந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியே, உண்மையான அதிமுக என்று கூறி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிராக தினகரன் தாக்கல் செய்த வழக்கில்தான், ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. 

Advertisement