இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காலையில் ஒன்று மலையில் ஒன்று என புரட்டி பேசுவதுதான் பாமக. தேர்தலுக்கு தேர்தல் திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளை கடுமையாக விமர்சிப்பது என்ற அணுகுமுறை பாமகவுக்கு வாடிக்கையான ஒன்று தான்.
விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.
தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு நட்பு பாராட்டிக்கொண்டு அதிமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மேற்குவங்கத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் வெளிப்படையான முரண்பாடு நிலவி வருகிறது.
அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணி வைக்க பாஜக முயல்கிறது, எனவே பெரும்பாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.