This Article is From May 27, 2019

இன்னும் 5 ஆண்டுகளில் மக்கள் ஏமாற்றமடையும் சூழல் ஏற்படும்: திருநாவுக்கரசர்

இன்னும் 5 ஆண்டுகளில் மக்கள் ஏமாற்றமடையும் சூழல் ஏற்படும் என திருச்சி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 5 ஆண்டுகளில் மக்கள் ஏமாற்றமடையும் சூழல் ஏற்படும்: திருநாவுக்கரசர்

இன்னும் 5 ஆண்டுகளில் மக்கள் ஏமாற்றமடையும் சூழல் ஏற்படும் என திருச்சி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் ராகுலே தலைவராக தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். பிரதமர் பதவி வரலாம், போகலாம். மன்மோகன் சிங் 2வது முறையாக பதவி ஏற்கும் போது, பிரதமர் பதவியை தருவதாக கூறினார் எனினும், ராகுல் அதனை மறுத்தார்.

இந்த முறை வரவில்லை என்றால், அடுத்த முறை பிரதமராக வரலாம், யாருக்கும் இந்தியாவை எழுதிக்கொடுக்கவில்லை, நிச்சயம் அடுத்த பிரதமராக அவர் தான் வருவார். மோடிக்கு இரண்டாவது முறை வாக்களித்திருக்கலாம் அவ்வளவுதான், மன்மோகன் சிங் 2வது முறை பிரதமராக வரவில்லையா, வாஜ்பாய் 3 முறை ஜெயிக்கவில்லையா? அதுபோல மோடி 2வது முறை வந்திருக்கிறார் என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

திருச்சி மக்களவைத் தொகுதியில் இதுவரை அதிமுகவினர் மட்டும் தான் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இந்த முறை நான் 4.59 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கூட இந்த முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்துள்ளது. அதே போல புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிகமான வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது.

மேலும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர அதிமுகவில் உள்ளவர்களும் எனக்கு வேண்டிய, எனக்கு பழக்கமான, என் நீண்ட நாள் நண்பர்கள் என பலர் மற்றும் ஏராளமான அதிமுகவினரும் எனக்கு வாக்களித்துதான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

.