This Article is From Jun 21, 2018

பிரிந்த குடும்பங்களுக்கு ஃபேஸ்புக் முலம் நிதி திரட்டிய அமெரிக்க மக்கள்

நான்கு நாட்கள் முடிவுக்கு பிறகு நிதியின் மதிப்பு 5 மில்லியன் டாலர் ராக உயர்ந்தது

பிரிந்த குடும்பங்களுக்கு ஃபேஸ்புக் முலம் நிதி திரட்டிய அமெரிக்க மக்கள்
சார்லோடி மற்றும் டேவ் வில்னர் தம்பதியினர் அமெரிக்க எல்லையில் குழந்தைகள் அழுவதை கண்டனர். அவர்களுக்கு அது தங்கள் 2 வயது குழந்தையை நினைவுப்படுத்தியது. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தம்பதியினர் அமெரிக்காவின் அதிகார ஆட்சியின் விளைவால் சட்ட விரோதமாக எல்லை மீறும் மக்களை கைது செய்யது மற்றும் அவர்களின் குழந்தைகள் அரசு கட்டுபாட்டில் வைக்கப்படுவது குறித்து அறிந்தவுடன் மிகவும் கவலையுடன் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக ஃபேஸ்புக் மூலம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். அது வெற்றி பெற்றுள்ளது.வில்பர்ஸின் இம்முயற்சி அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் முறியடிக்கும் என்று நம்பினார்.

சட்ட விரோதமாக எல்லை மீறும் மக்கள், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டவர்கள் போலவே ஜாமின் பெற்று கொண்டு வெளியே வரலாம். பிறகு அவர்கள் தங்கள் குழந்தைகளை அரசாங்கத்திடமிருந்துப் பெற்றுக் கொள்ளலாம்.

கைது செய்யப்பட்டு குடியேறியவர்களுக்கான பாண்ட் தொகை நூறிலிருந்து பல ஆயிர டாலர்கள் வரை செலவாகும். இதற்காக உதவ வேண்டும் என முடிவு செய்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார் வில்னர்ஸ். வார முடிவில் அதற்கான தொகை கிடைத்தது. பெற்றோர்களை விடுவிக்க 1500 பேருக்கு 1500 டாலரே போதுமானதாம்.
இவ்வாறு செய்தால் அக்குழந்தைகளுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார் டேவிட் வில்னர்.

நான்கு நாட்கள் முடிவுக்கு பிறகு நிதியின் மதிப்பு 5 மில்லியன் டாலராக உயர்ந்தது.
இதுவே நாங்கள் பேஸ்புக் கீழ் கண்ட மிக பெரிய நிதி திரட்டும் முயற்சி ஆகும். என சமூக ஊடக செயதி தெடர்பாரளர் ரோயா வின்னர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

பேஸ்புக் கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இந்த நிதிக்கு பங்களிதவர்களில் ஒருவர் ஆவார். தங்கள் அரசாங்கத்தின் கொடூரமான திட்டம் மற்றும் புலம் பெயர்ந்த மக்களின் பயணத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கர்கள் அதிகமான அளவில் நிதி அளித்துள்ளனர். கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அப்பால் உள்ள மக்களுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

சார்லஸ் வின்டர் ஃபேஸ்புக்கில் முதல் நாள் பதிவில் " நம் ஒற்றுமையே நம்மை பாதுகாக்கும்" என்று கூறியிருந்தார். அதுவே அமேரிக்கர்கள் ஒன்று இணைந்து செயல்பட காரணமாக அமைந்தது. "குழந்தைகள் என்றும் குழந்தைகள் தான்.அவர்களுக்கு நம் உதவி தேவை " என்று சொன்னா லியா காய்லர் கூறினார்.

டெக்சாஸ் இந்த முயற்சி லாப நோக்கமற்றது. நிமிடத்திற்கு 4,000 டாலர்கள் நிதியாக கிடைக்கிறது. இதிலிருந்து  பெறப்படும் தொகை பெற்றோர்களை விடுவிக்க மட்டுமின்றி அவர்கள் நீதிமன்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும்.




(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.