This Article is From Apr 15, 2020

“இதில் ஜாதி மட்டும் விடுபட்டுள்ளதே!”- கமலின் பதிவிற்கு திருமுருகன் காந்தியின் கேள்வி!!

"'ஜாதி' ஒழியத்தானே அண்ணல் போராடினார்? ஜாதிதான் ஒழியட்டுமே"

Advertisement
தமிழ்நாடு Written by

"இந்தியா/இந்துமதத்தின் மிகப்பெரும் பாகுபாடு ஜாதிதானே? அதுதானே தொழிலையும் நிர்ணயித்தது."

Highlights

  • அம்பேத்கரின் 129வது பிறந்த தினம் நேற்று
  • இதையொட்டி பலரும் அவரை நினைவுகூர்ந்தனர்
  • கமலும் அம்பேத்கர் குறித்து ட்விட்டரில் கருத்திட்டிருந்தார்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

இதனிடையே, ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்பேத்கரின் 129-வது பிறந்த நாளும் நேற்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் பலரும் அவரது கோட்பாடுகளை நினைவுகூர்ந்து வருகின்றனர். 

அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியத் திருநாடு, யாரையும் மதத்தாலோ, இனத்தாலோ, மொழியாலோ, தொழிலாலோ, பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவுதான் அரசியல் சட்டமாகி, தனி மனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது. அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதற்கு ‘மே 17 இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “'இனம்' 'மதம்' 'மொழி' 'தொழில்' என பாகுபாடு பார்க்கக் கூடாது என்றிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. 

இதில் 'ஜாதி' என்பது மட்டும் விடுபட்டுள்ளதே! இந்தியா/இந்துமதத்தின் மிகப்பெரும் பாகுபாடு ஜாதிதானே? அதுதானே தொழிலையும் நிர்ணயித்தது.

Advertisement

'ஜாதி' ஒழியத்தானே அண்ணல் போராடினார்? ஜாதிதான் ஒழியட்டுமே!”, என்று கமலின் பதிவை குறிப்பிட்டு, விமர்சனக் கருத்தை முன் வைத்துள்ளார். 

Advertisement