This Article is From Oct 22, 2019

சவாரி செய்ய ஏறினால் மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழும் சோம்பேறிக் குதிரை! #Video

சோம்பேறித்தனம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; சில சமயம் மனிதர்களை விடவும் படு சோம்பேறியாக விலங்குகள் இருக்கும் என்பதற்கு உதாரணம் இந்த வீடியோ.

சவாரி செய்ய ஏறினால் மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழும் சோம்பேறிக் குதிரை! #Video

மயக்கம் வருவதுபோல் நடித்து விழுந்த குதிரை.

சவாரி செய்ய யாரேனும் ஏறினால் தனக்கு மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழுந்து விடுகிறது ஒரு சோம்பேறிக் குதிரை. உயிர்போனால் எப்படி தரையில் படுத்திருக்குமோ, அதே போன்று அந்தக் குதிரை படுத்துக் கொள்கிறது. சவாரி செய்ய வந்தவர் திரும்பிச் சென்றதும் குதிரை துள்ளி எழுந்து விடுகிறது. 

இந்த சுட்டிக் குதிரை செய்யும் சேட்டைதான் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருக்கிறது சோம்பேறிக் குதிரையின் வீடியோ. 
 

.

பேஸ்புக்கில் பிராசிஸ்கோ ஜலாசர் என்பவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். குதிரைக்கு 'ஜிங்ஜாங்' என்று பெயர் வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் அதன் மீது ஏற வரும்போது மயங்கி விழுந்து விடுகிறது. சில சமயம் தொட்டாலே மயக்கம்போட்டு விழுகிறது ஜிங்ஜாங்.

தரையில் படுத்துக் கொண்டு நாக்கை வெளியே நீட்டி இறந்ததுபோல் நடிக்கும் ஜிங்ஜாங்கின் சேட்டை, படு சுட்டித்தனமாக உள்ளது. 

குதிரையின் க்யூட்டான செயல்பாடுகளை நெட்டிசன்கள் கமென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக, நகம் வெட்டுவதை விரும்பாத நாய் ஒன்று, நகவெட்டியை அருகில் கொண்டு சென்றாலே மயக்கம் வருவதுபோல் தரையில் விழுந்தது. இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

.