This Article is From Jul 30, 2019

திடீரென காணாமல் போன புதுமுக நடிகை! உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு!

மனுவில் பெற்றோரின் சட்டவிரோத காவலில் கதாநாயகி சத்தியகலா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது

திடீரென காணாமல் போன புதுமுக நடிகை! உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு!

ஹைலைட்ஸ்

  • இந்த வாரம் 2ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது
  • பல்வேறு விருது வழங்கும் விழாவில் இப்படம் விருதுகளை பெற்றுள்ளது
  • தொரட்டி படம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார் நடிகை சத்யகலா

அறிமுக நடிகர்கள், ஷமன் மித்ரு, சத்யகலா இருவரின் நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படம் ‘தொரட்டி'. தென் மாவட்டமான ராமநாதபுரத்தில் 80களில் வாழ்ந்த ஆடு மேய்க்கும் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் நாயகி சத்யகலா காணாமல் போய் இருப்பதால் படத்தின் விளம்பர பணிகள் முடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ஷமன் தயாரிப்பு நிறுவனம் கதாநாயகி சத்தியகலா திடீரென காணாமல் போனதால், படத்தின் விளம்பர பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கதாநாயகியை ஆஜர்படுத்த கோரியும், பட தயாரிப்பாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், மனுவில் பெற்றோரின் சட்டவிரோத காவலில் கதாநாயகி சத்தியகலா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க, பொள்ளாச்சி காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது. 

.