பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் சொகுசு கார் திருடர்கள் என்பதும், சொகுசு கார்களை பயன்படுத்தி போதைப் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் சல்மான் கான், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். அவருக்கு 2 பேர் பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் தனது பெயரை மாற்றி சல்மானுக்கு மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ஜாக்கி பிஷ்னோய் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் விளம்பரத்திற்காக மிரட்டல் விடுத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து சொகுசுக்கார் ஒன்றை பறிமுதல் செய்த போலீசார் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் சொகுசு கார் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அதனை போதைப் பொருட்களை கடத்துவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.
இருவர் மீதும், திருட்டு மற்றும் போதைப் பொருள் கடத்தல் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)