हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 07, 2019

அசாமில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிடச் சொல்லி மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்

பைக்கில் வந்த நான்கு பேர் ஒரு மருத்துக் கடைக்கு வந்து அதன் ஊழியர்களின் ஒருவரான ராகிபுல் ஹக்கை அடித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது (Representational)

Guwahati:


அசாம் மாநிலம் பர்பிட மாவட்டத்தில் மூன்று முஸ்லீம் இளைஞர்களை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடச் சொல்லி வற்புறுத்திய  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஃபக்ரூதின் அலி அகமது மருத்துவக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ஜோதி காவ்ன் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பைக்கில் வந்த நான்கு பேர் ஒரு மருத்துக் கடைக்கு வந்து அதன் ஊழியர்களின் ஒருவரான ராகிபுல் ஹக்கை அடித்துள்ளனர். 

அருகில் உள்ள டீக்கடையிலிருந்த குர்பன் கான் மற்றும் புரான் அலி என்பவரை தவறான வார்த்தைகளில் கடுமையாக திட்டியுள்ளனர். எந்த காரணமும் இல்லாமல் அவர்களை அடித்துள்ளனர். ‘ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட கட்டாயப்படுத்தப்பட்டனர்' என்று ஜாகிர் உசேன் என்பவர் கூறினார். 

இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாகவும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement