This Article is From Aug 10, 2018

ஆகஸ்டு 17ஆம் தேதி தொடங்கும் புதுச்சேரி ‘இலக்கிய விழா’

மூன்று நாட்கள் நடைப்பெறும் புதுச்சேரி இலக்கிய விழா, ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்டு 17ஆம் தேதி தொடங்கும் புதுச்சேரி ‘இலக்கிய விழா’

புதுச்சேரி: மூன்று நாட்கள் நடைப்பெறும் புதுச்சேரி இலக்கிய விழா, ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டோலோக் ஈவெண்ட்ஸ் நிறுவனம் வழங்கும் இந்த விழாவில், இலக்கியம், பாரம்பரியம், சமூகம், கலை, அரசியல் சார்ந்த கருத்தரங்கங்கள் நடைப்பெற உள்ளதாக ஆரோதன் கலைக்கூடத்தின் பொறுப்பாளர் லலித் வர்மா தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எழுத்தாளர்கள் வருகை தர உள்ளனர்.

புதுச்சேரி காந்தி திடலில் நடக்க இருக்கும் இலக்கிய விழாவை, மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தொடங்கி வைக்க உள்ளார் என்று வெர்மா தெரிவித்தார்.

முன்னனி எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் கலந்துரையாடல்கள் இலக்கிய விழாவில் இடம் பெற உள்ளன. நிகழ்ச்சி ஒருங்கினைபாளராக ஆலியான்ஸ் பிரான்சைஸ் குழு செயல்பட உள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.