This Article is From Apr 23, 2020

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு திடீர் நிறுத்தம்!!

கொரோனா பாதிப்பால் ஏற்படும் இழப்பை சரிக்கட்டுவதற்காக மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு திடீர் நிறுத்தம்!!

ஜூன் 2021 வரையில் அகவிலைப்படி உயர்வு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • மத்திய அரசு அகவிலைப்படியை 17 லிருந்து 21 சதவீதமாக உயர்த்தியிருந்தது
  • 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை டி.ஏ. உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது
  • கொரோனா பாதிப்பால் மத்திய அரசு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
New Delhi:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுத்தம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் 2021 வரையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இதே நடவடிக்கையை மாநில அரசுகளும் எடுத்தால் ரூ. 1.20 லட்சம் கோடி அளவுக்கு செலவு மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் ஏற்படும் இழப்பை சரிக்கட்டுவதற்காக மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

அரசின் இந்த நடவடிக்கையால் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பாதிப்ப ஏற்படும். மத்திய அரசு தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

கொரோனா பாதிப்பு காரணமாக சுகாதாரத்துறை மற்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தரப்பு மக்களின் நலனுக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான அகவிலப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியின்படி தொகை வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் நடப்பு நிதியாண்டில் ரூ. 37,350 கோடி அளவுக்கு மிச்சம் ஏற்படும். இதே நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொண்டால் அந்த வகைக்காக மட்டும் ரூ. 82,566 கோடி மிச்சமாகும். ஒட்டுமொத்த நடவடிக்கையால் ரூ. 1.20 லட்சம் கோடி அளவுக்கு நாம் சிக்கனப்படுத்தலாம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை 21 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. 

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21,393 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4,258 பேர் குணம் அடைந்துள்ளனர். 681 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.