This Article is From Sep 18, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5.30 லட்சத்தைக் கடந்தது!

தமிழகத்தில் இன்று மட்டும் 67 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,685 ஆக அதிகரித்துள்ளது

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் ஒரே நாளில் 5,488 பேருக்குக் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 83,701 பேரில், 5,488 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 63,03,466 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று 67 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,685 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,488 பேரில் 3293 பேர் ஆண்களும், 2,194 பேர் பெண்களாவார்கள். இதுவரை 3,19,939 ஆண்களும், 2,10,939பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 174 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

தற்போது 46,506 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

Advertisement