This Article is From Dec 22, 2018

அமைச்சர் செங்கோட்டையன் தகவலால் தற்காலிக ஆசிரியர்களுக்கு சிக்கல்!

தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் பணி புரியும் தற்காலிக ஆசிரியர்களுகும், ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம்: பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

Advertisement
Tamil Nadu Posted by

தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் பணி புரியும் தற்காலிக ஆசிரியர்களுகும், ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘தற்காலிக ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிப்பது குறித்து தற்போது தடை உத்தரவு இருக்கிறது. இதை சரிகட்டும் நோக்கில், தற்காலிக ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்படும்.

இது குறித்து அரசு சார்பில், நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்படும். அரசு பள்ளியில் காலியாக இருக்கும் ஆசிரியப் பணியிடங்களுக்கு, விரைவில் நிரந்தரப் பணியில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement