தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.51 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக தொற்று எண்ணிக்கை 6 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதின் ஆளுநருக்கு தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் காவலர்கள், ஊழியர்கள் உட்பட ஏற்கெனவே 80க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 7 நாட்களாக ஆளுநர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
Advertisement
COMMENTS
Advertisement