முக்கொம்பு மேலணையை முன் கூட்டியே ஆய்வு செய்திருந்தால், உடையாமல் தடுத்திருக்கலாம், என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று காலை நேரில் சென்று உடைந்த முக்கொம்பு மேலணையை பார்வையிட்ட ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, ஆகஸ்ட் 24-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலணையின் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், தற்போது 40%பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாகவும் கூறினார்.
முக்கொம்பு மேலணையில் உள்ள 45 மதகுகளில் 9 மதகுகள், அதிகபடியான நீர் வரத்து காரணமாக, ஆகஸ்ட் 22-ம் தேதி சேதமடைந்து உடைந்தது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)