This Article is From Sep 03, 2018

முக்கொம்பு மேலணை உடைய தமிழக அரசே காரணம்

முக்கொம்பு மேலணையை முன் கூட்டியே ஆய்வு செய்திருந்தால், உடையாமல் தடுத்திருக்கலாம்

முக்கொம்பு மேலணை உடைய தமிழக அரசே காரணம்

முக்கொம்பு மேலணையை முன் கூட்டியே ஆய்வு செய்திருந்தால், உடையாமல் தடுத்திருக்கலாம், என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நேரில் சென்று உடைந்த முக்கொம்பு மேலணையை பார்வையிட்ட ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, ஆகஸ்ட் 24-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலணையின் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், தற்போது 40%பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாகவும் கூறினார்.

முக்கொம்பு மேலணையில் உள்ள 45 மதகுகளில் 9 மதகுகள், அதிகபடியான நீர் வரத்து காரணமாக, ஆகஸ்ட் 22-ம் தேதி சேதமடைந்து உடைந்தது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.